Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலை நிறுத்தம்

அக்டோபர் 22, 2019 04:15

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணத்தில் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் தேவையற்ற வங்கிகளின் இணைப்பை  கண்டித்தும், சேவைக் கட்டணம் என்ற போர்வையில் சாதாரண மக்களின் சேமிப்பை சுருண்டுவதை கண்டித்தும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் பஞ்சாப் நேஷனல் வங்கி அருகில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் நாராயணன் மற்றும் 50க்கு மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

தலைப்புச்செய்திகள்